உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, 5-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.15-ம் தேதி முதல் நீச்சல் குளம் திறக்கலாம் என்றும், திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் அக்.15ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகள், தனியார் அலுவலகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபான கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலைகளில் இரவு 9 மணி வரை மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…