மதுபான பார்கள், திரையரங்குகள் திறக்க அனுமதி – புதுச்சேரி அரசு

Published by
லீனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த சில நாட்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரி  மாநிலத்தில் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 5-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தேகம் இருந்தால் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு 2-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.15-ம் தேதி முதல் நீச்சல் குளம் திறக்கலாம் என்றும், திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் திறக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு பூங்காக்கள், சுற்றுலா தளங்கள் அக்.15ம் தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகள், தனியார் அலுவலகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் மற்றும் அமர்ந்து சாப்பிடும் மதுபான கூடங்கள் கலால் விதிமுறைப்படி இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் உள்ள கடற்கரை சாலைகளில் இரவு 9 மணி வரை மட்டுமே நடைப்பயிற்சி மேற்கொள்ள புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

4 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

5 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

6 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

6 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

7 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

8 hours ago