அருமையானபோட்டி..!கொரோனா இல்லாத கிராமமாக மாற்றினால் ரூ.50 லட்சம் பரிசு..!

Published by
Edison

கிராமப்புற பகுதிகளை “கொரோனா இல்லாத கிராமமாக” மாற்றினால், முதல் பரிசாக ‘ரூ.50 லட்சம் பரிசுத் தொகை’ வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் 2 வது அலையானது மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தினசரி பாதிப்பானது 60 ஆயிரத்தை எட்டியுள்ளது.மேலும்,தினசரி கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.
அதாவது,மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி வேகமாக பரவி வருகிறது.ஏனெனில்,கிராமங்களில் போதுமான சுகாதார கட்டமைப்பு வசதிகள் குறைவு என்பதால்,கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனால்,கிராமப்புற பகுதிகளில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில்,கிராமப்புற பகுதிகளை, “கொரோனா இல்லாத கிராமமாக” மாற்றினால், ‘ரூ.50 லட்சம் பரிசுத் தொகை’ வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.அதாவது, கொரோனா ஒழிப்பில் பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பெறும் வகையில் இந்த போட்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி,கொரோனா தடுப்பு நடவடிக்கையை சிறப்பாக கையாளும் கிராமத்திற்கு முதல் பரிசாக ரூ.50 லட்சம், 2 வது பரிசாக ரூ.25 லட்சம், 3 வது பரிசாக ரூ.15 லட்சம் பரிசாக வழங்கப்படும்.மேலும்,ஒவ்வொரு வருவாய் மண்டலத்துக்கு உள்பட்ட மூன்று கிராமங்களில் இந்த போட்டி நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து,எந்த கிராமம் சிறப்பாக செயல்பட்டது என்ற முடிவை தேர்வு செய்ய ஒரு கமிட்டி உருவாக்கப்படும் என அம்மாநில கிராமப்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் தெரிவித்துள்ளார்.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

3 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

4 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

4 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

5 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

5 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

6 hours ago