இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் மூலம் தன்னை பெண் என்று கூறி 70 பெண்களை ஏமாற்றிய வாலிபர் கைது!

Published by
Rebekal

தன்னைப் பெண் என்று கூறி பல போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் 70க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய வாலிபர் சைபர் கிரைம் போலீசாரால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது எல்லாம் சமூக வலைதளம் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் என்னும் நிலைக்கு வந்துவிட்டது. மேலும் சாதாரணமாக ஒரு செயலி இருக்கிறது என்றால் அதில் ஒரு கணக்கு தொடங்கும்பவர் தனது கணக்கு மட்டுமல்லாமல் தனது பெயர்களை மாற்றி பாலினத்தை மாற்றி வேறு ஒரு போலியான கணக்குகளையும் தொடங்கி அதன் மூலம் பல்வேறு ஏமாற்று காரியங்களையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், விஜயவாடா பகுதியை சேர்ந்த சுமன் எனும் நபர் ஹைதராபாத்தில் அமேசான் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.

பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பக் கூடிய இவர் இரவு நேரத்தில் பெண்கள் பலரிடம் தனது போலி கணக்கு மூலமாக உரையாடியுள்ளார். முதலில் பெண்களின் கணக்கு போல தொடங்கப்பட்டுள்ள இவரது போலி கணக்குகளை நம்பி இவரை பெண்தான் என்று நினைத்து பேசக்கூடிய பெண்களிடம் நாளடைவில் அவர்கள் முகம் சுளிக்கும் விதமாக தன்னுடைய நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளார். இவ்வாறு சுமன் பேசிய பெண்களில் 70க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட ஒரு பெண் தைரியமாக அளித்த புகாரின் அடிப்படையில் சுமனை ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

Published by
Rebekal

Recent Posts

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

19 minutes ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

54 minutes ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

2 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

2 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

3 hours ago