தனித்து போட்டியிடும் மாயாவதி ! அகிலேஷ் யாத​வ் வருத்தம்

கூட்டணி முறிந்தது வருத்தம் அளிக்கிறது என்று அகிலேஷ் யாத​வ் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில்  பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி  கட்சிகள்  இணைந்து

கூட்டணி முறிந்தது வருத்தம் அளிக்கிறது என்று அகிலேஷ் யாத​வ் தெரிவித்துள்ளார்.உத்திரபிரதேச மாநிலத்தில்  பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி  கட்சிகள்  இணைந்து மக்களவை தேர்தலை சந்தித்தது.ஆனால் எதிர்பார்த்த வெற்றி இந்த கூட்டணிக்கு கிடைக்கவில்லை.இன்று இதற்கு ஏற்ற வகையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அதில், உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள 11 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டி என்று  அறிவித்துள்ளார்.மேலும்  தனித்துப் போட்டியிட்டாலும் அகிலேஷ் உடனான நட்பு தொடரும் என்றும் தெரிவித்தார்.

unknown node

இந்நிலையில்  மாயாவதி அறிவிப்பு தொடர்பாக லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.அப்போது அவர் கூறுகையில்,கூட்டணி முறிந்தது வருத்தம் அளிக்கிறது .மேலும் வரும் 11 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்றும் அகிலேஷ் யாத​வ் தெரிவித்துள்ளார்.