பிரதமர் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் மோடியும் அவரது அரசும் கொரோனா பேரழிவை ஏற்படுத்திய குற்றத்திற்கு மற்றவர்கள் மீது பழியை சுமத்திவிட்டு தப்பியோட முடியாது முதலில் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என பழியை போட்ட மோடி பின்னர் மாநில அரசுகளை குறை கூற தொடங்கி விட்டார்.
தற்போது பிரதமர் மோடி கட்டுப்படுத்த முடியாத கொரோனா வைரஸின் மரபணு மாற்றத்தை குறை கூற தொடங்கி உள்ளார். அனைத்து வைரஸும் மரபணு மாற்றத்தை பெறும். ஆனால், சாதகமான சூழ்நிலை நிலவினால் அது உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறும்.அறிவியலுக்கு புறம்பான முறையில் பெரும் கூட்டங்களை நடத்தி கொரோனாவை பிரதமர் மோடி பரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி எந்த திட்டமும் இல்லாமல் தற்பெருமை பேசி ஒரு வருட காலத்தை வீணடித்து விட்டார் என கூறியுள்ள அவர் மக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன், படுக்கைகள், தடுப்பூசி ஆகியவற்றை அளித்து மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என அறிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…