மோடியிடம் சிஏஏ குறித்து பேசவில்லை.! மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் – ட்ரம்ப்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • பிரதமர் மோடியிடம் குடியுரிமை சட்டம் குறித்து பேசவில்லை, ஆனால் மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்தார்.

2 நாள் அரசு பயணமாக இந்திய வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று 2வது நாளாக காலை குடியரசு மாளிகைக்கு சென்ற டிரம்புக்கு முப்படை மரியாதை செலுத்தி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். பின்னர் ராஜ்பாத்தில் உள்ள காந்தி நினைவிடத்தில் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து அங்கிருந்து ஐதராபாத் இல்லத்துக்கு சென்று ட்ரம்ப் மற்றும் மோடி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 3 ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செய்தியாளர்கள் குடியுரிமை சட்டம் குறித்து ட்ரம்பிடம் கேள்வி ஒன்றை எழுப்பினர்.

அதற்கு ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் குடியுரிமை சட்டம் குறித்து பேசவில்லை, ஆனால் மத சுதந்திரத்தை குறித்து பேசினேன் என்று தெரிவித்தார். இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார். பின்னர் மத சுதந்திரத்திற்கு பிரதமர் மோடி ஆதரவாக இருக்கிறார் என்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடம் பேசியதிலிருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்து ஏதும் வரவில்லை என அமெரிக்க அதிபர் தெரிவித்தார். மேலும் டெல்லியில் நடக்கும் வன்முறை பற்றி கேள்விப்பட்டேன். ஆனால் அதைக்குறித்து பிரதமரிடம் நான் கேட்கவில்லை எனவும் டெல்லியில் ஏற்பட்ட பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என குறிப்பிட்டார். இதையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு குடியரசு மாளிகையில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை முடித்தவுடன் திரும்ப அமெரிக்கா செல்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

1 hour ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

2 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

2 hours ago

தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!

சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…

3 hours ago

”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!

மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…

4 hours ago

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…

4 hours ago