Categories: இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்… புதிய வளாகத்தில் ஜூலை 20இல் தொடங்குகிறது.!

Published by
Muthu Kumar

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என அறிவிப்பு.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வரும் ஜூலை 20 ஆம் தேதி தொடங்குவதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது.

மேலும் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் குறிப்பாக மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசும் பொது சிவில் சட்டத்திற்கான மசோதாவை இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by
Muthu Kumar

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

1 hour ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

2 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

3 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

3 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

4 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

4 hours ago