தாய் மற்றும் 5 பெண் குழந்தைகள் ரயில் முன் விழுந்து தற்கொலை!

Published by
Rebekal
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண் குழந்தைகள் மற்றும் தாய் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
  • குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட விரக்தி தான் தற்கொலைக்கு காரணம் என தகவல்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பெண்ணொருவர் தனது ஐந்து பெண் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு சென்று மகாசமுந்த் மற்றும் பெல்சோண்டா ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் ரயில் வரும் நள்ளிரவு நேரத்தில் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து உயிர் இழந்துள்ளனர். ஒரே நேரத்தில் ஆறு பேர் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் உடனடியாக கிராமத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரித்த போது உயிரிழந்த பெண் 45 வயதுடைய உமா எனவும், இவர் பெம்சா கிராமத்தை சேர்ந்தவர் எனவும் இவருக்கும் இவரது கணவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்பம் சண்டை ஏற்பட்டு வந்ததாகவுஜம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குடும்ப பிரச்சனையால் ஏற்பட்ட மன விரக்தி காரணமாக தான் 10 வயது முதல் 18 வயதுடைய தனது 5 குழந்தை பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து உள்ளார் என தெரிய வந்துள்ளது. தற்போது இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

7 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

9 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago