மத்தியப்பிரதேசத்தில் உள்ள அலிராஜ்பூரில் மனைவியை சாலையில் வைத்து குச்சியால் அடித்து தாக்கியுள்ளார் கணவர்.
மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் தனது மனைவி ஒரு பையனுடன் தனியாக இருப்பதைக் கண்ட கணவன், அந்த மனைவியை குச்சியால் அடித்து தாக்கியுள்ளார். அங்குள்ள சோண்ட்வா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் செப்டம்பர் 10-ஆம் தேதி சாலையின் நடுவில் வைத்துஅடித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து போலீசார் 6 பேரை கைது செய்தனர். முதலில், அவர் தனது மனைவியை தனது வீட்டை விட்டு வெளியே இழுத்துள்ளார். பின்னர் அவளுடன் தனியாக இருந்த பையனையும் வெளியே கொண்டு வந்துள்ளார். அவர்கள் இருவரும் கொடூரமாக தாக்கப்பட்டனர்.
அந்த பெண்ணின் மாமியார், பெண் மற்றும் பையனை அடிக்க தனது மகனைத் தூண்டிய காட்சி அந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. வீடியோ வைரலான பிறகு, போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். பெண்ணின் கணவர், மாமியார், மாமனார் மற்றும் கணவரின் இரண்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அலிராஜ்பூர் காவல் கண்காணிப்பாளர் மனோஜ் குமார் சிங் கூறினார்.
வீடியோவை உருவாக்கிய ஒரு மைனரும் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…