ஸ்மார்ட் போன்களில் தற்காலத்து இளைஞர்கள் பெரியவர்கள் என பலரால் ஈர்க்கப்பட்டு பரவலாக விளையாடப்படும் கேம் பப்ஜி. இந்த விளையாட்டினால் மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட குற்றச்செயல்கள் என பல அரங்கேறியுள்ளன. அப்படி ஒரு சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறி ஒரு இளைஞனின் உயிரை பறித்துவிட்டது.
மத்திய பிரதேச மாநிலத்தில், குவாலியர் எனும் இடத்தில் இருந்து ஆக்ரா வரை ரயிலில் இரு இளைஞர்கள் பயணித்துவந்துள்ளனர். அதில் ஒருவர் பெயர் சவுரப் யாதவ். இவர் தனது நண்பர் சந்தோஷ் சர்மாவுடன் பயணித்துள்ளார். சந்தோஷ் சர்மா நகை தொழிலாளி. அவர் நகையை கழுவ ஆசிட் எடுத்து தனது பையில் வைத்திருந்துள்ளார்.
சவுரப் யாதவ், ரயிலில் பப்ஜி விளையாடிகொண்டு வந்துள்ளார். அப்போது அவருக்கு தாகம் எடுத்துள்ளது. உடனே நண்பர் பையில் வைத்திருந்த ஆசிட்டை தண்ணீர் என நினைத்து எடுத்து குடித்துவிட்டார். உடனே தொண்டை வழியில் துடித்துள்ளார். இதனை அறிந்த சக பயணிகள் உடனே ரயில்வே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலிஸ் விசாரித்து வருகிறது. இறந்த இளைஞனின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…