அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் மனு வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு!

Default Image

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்து, ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையிலேயே இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. 

அன்வை நாயக் என்ற கட்டட வடிவமைப்பாளர், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அந்த தற்கொலைக்கு அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் ஷேக் மற்றும் நித்தீஷ் சர்தா தான் காரணம் எனவும், அவர்கள் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாய் தராததால் தற்கொலை செய்யப்போவதாக அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

இதன்காரணமாக மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து, மும்பையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மேலும் அர்னாப்க்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். தனிமைப்படுத்தும் முகாமில் இருந்த அவரை நேற்று காலை போலீஸ் வேனில் தலோஜா மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரை அழைத்துச்சென்ற வேனின் ஜன்னல்களை சுற்றி கருப்பு நிற திரையால் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவின் விசாரணை இன்று எஸ்.எஸ்.ஷிண்டே, எம்.எஸ்.கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, ஜாமீன் கிடைக்கும் வரை அவர் சிறையிலேயே இருக்குமாறும், மாறாக கோஸ்வாமி ஜாமீன் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அர்னாப் கைது செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts