இந்தியாவில் வெளிநாட்டவர் 11 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தங்கி இருந்தால் மட்டுமே அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். தற்போது இந்த முறையில் சட்ட திருத்தும் கொண்டு வந்து, அதாவது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்து தங்கியிருக்கும் முஸ்லீம் அல்லாத மற்ற மதத்தினர்கள் 6 ஆண்டுகள் தங்கியிருந்தாலே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் படி மசோதா, மத்திய அரசால் மக்களவையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பலர் ஆதரவும், பலர் எதிர்ப்பு குரலும் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான அப்துர் ரஹ்மான் என்பவர், இந்த குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் கூறியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘ இந்த மசோதாவிற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அதனால். நான் எனது பணியை இன்று முதல் தொடரப்போவதில்லை. நாளை முதல் நாளை முதல் அலுவலகத்திற்கு வர மாட்டேன். என்னுடன் சேர்ந்து பணியாற்ற நினைத்த அதிகாரிகளுக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இஸ்லாமியர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கு ஆதரவாகவும் ஜனநாயக முறையில் இந்த சட்ட திருத்த மசோதா இருக்க வேண்டும். இந்த சட்ட மசோதா எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தின் மதச்சார்பின்மையை உடைக்கும் முயற்சி ஏற்புடையது அல்ல. ஆதலால் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்து போராட வேண்டும்
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…