நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்துள்ள நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்பொழுது பேசிய பிரதமர், நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறிய அவர், மக்களிடையே கொரோனா பரவல் தொடர்பான அச்சத்தை குறைப்பது, அரசின் கடமை என கூறினார். அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என கூறிய பிரதமர், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என தெரிவித்தார்.
மேலும், கொரோனா பரவலை நாம் மீண்டும் தடுக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற காரணத்தினால், நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும், தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…
டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…