மே-23ம் தேதி NEFT சேவை நிறுத்தம் – ரிசர்வ் வங்கி

The Reserve Bank of India has said that the NEFT service will not be operational on May 23.

மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை தான் மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது. நேரடி பரிவர்த்தனையை விட அதிகமான மக்கள் ஆன்லைன் மூலமாக தான் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர். ஆன்லைன் பரிவர்த்தனையில், NEFT & RTGS முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்நிலையில், மே மாதம் 23-ஆம் தேதி அன்று NEFT சேவை இயங்காது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி, மே 23-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சமயங்களில் பண பரிவர்த்தனை நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.