கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நேரு விலங்கியல் பூங்கா சிங்கங்கள் குணமடைந்துள்ளது!

Published by
Rebekal

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள எட்டு சிங்கங்கள் தற்போது குணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மனிதர்களுக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பி வந்த நிலையில், தற்பொழுது விலங்குகளுக்கும்கொரோனாவின் தாக்கம் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா முதல் அலையிலேயே நியூயார்க் விலங்கியல் பூங்காவில் மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்ட சம்பவம் தெரியவந்தது. தற்பொழுது கொரோனா இரண்டாம் அலையில் வன விலங்குகள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கும் காய்ச்சல் போன்ற கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏற்பட்டது.

எனவே அந்த சிங்கங்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் நான்கு ஆண் மற்றும் நான்கு பெண் சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது உறுதியானது. இதனையடுத்து இந்த 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த நிலையில், 14 நாட்கள் கடந்த பின்பு மீண்டும் பரிசோதனை செய்ததில் தற்பொழுது இந்த சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

5 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

6 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

7 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

7 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago