இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நேபாளத்தின் புதிய வரைபடத்தின் நிறைவேற்றும் மசோதா ஒத்திவைப்பு.
புதிய வரைபடத்தின் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததை அடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்திவைத்திருக்கிறது. தங்கள் நாட்டில் கொரோனா பரவ இந்தியா தான் காரணம் என்று நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஓலி பழி சுமத்தியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. கடந்த வாரம் அந்த நாடு வெளியிட்ட புதிய வரைபடத்தில் இந்தியாவின் மலைப்பகுதிகள் மற்றும் நிலப்பரப்புகள் நேபாளத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு இந்தியாவின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டது. காளி நதிக்கு இருபுறமும் உள்ள பகுதிகளை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதாக நேபாளம் அளித்த விளக்கத்தை இந்தியா ஏற்கவில்லை. இதனையடுத்து இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக அந்த வரைபடத்தை வெளியிடும் முடிவை நேபாளம் அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த புதிய வரைபடத்துக்கு நேபாளத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனால் நாடாளுமன்றத்தில் புதிய வரைபட மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை, இதனிடையே சீனாவின் தூண்டுதலால் இந்தியாவுடன் எல்லை பிரச்னை நேபாளம் கையில் எடுத்துள்ளதாக இந்திய ராணுவ தளபதி எம்.எம் நரவனே தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…