இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நேபாளத்தின் புதிய வரைபடத்தின் நிறைவேற்றும் மசோதா ஒத்திவைப்பு.
புதிய வரைபடத்தின் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்ததை அடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்திவைத்திருக்கிறது. தங்கள் நாட்டில் கொரோனா பரவ இந்தியா தான் காரணம் என்று நேபாளம் பிரதமர் கே.பி.சர்மா ஓலி பழி சுமத்தியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. கடந்த வாரம் அந்த நாடு வெளியிட்ட புதிய வரைபடத்தில் இந்தியாவின் மலைப்பகுதிகள் மற்றும் நிலப்பரப்புகள் நேபாளத்துக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு இந்தியாவின் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டது. காளி நதிக்கு இருபுறமும் உள்ள பகுதிகளை இருநாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதாக நேபாளம் அளித்த விளக்கத்தை இந்தியா ஏற்கவில்லை. இதனையடுத்து இந்தியாவின் வளத்தின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக அந்த வரைபடத்தை வெளியிடும் முடிவை நேபாளம் அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த புதிய வரைபடத்துக்கு நேபாளத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தன. இதனால் நாடாளுமன்றத்தில் புதிய வரைபட மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை, இதனிடையே சீனாவின் தூண்டுதலால் இந்தியாவுடன் எல்லை பிரச்னை நேபாளம் கையில் எடுத்துள்ளதாக இந்திய ராணுவ தளபதி எம்.எம் நரவனே தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…