2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம்..!

Published by
Edison

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரதமர் மோடிக்கு புதிய இல்லம் கட்டப்படும் என்று மத்திய பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில்,அதன் அருகிலேயே ரூ.971 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு 2020 செப்டம்பர் 29 அன்று முடிவு செய்தது.இதற்கான ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது.

2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய பாராளுமன்ற கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது.

பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நவீன வசதிகளுடன்,தரைக்கு கீழே ஒரு தளம்,தரை தளம்,முதல் மற்றும் இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் இந்த புதிய பாராளுமன்றம் கட்டப்பட உள்ளது.

இருப்பினும்,புதிய பாராளுமன்றம் கட்டுவதில் விதிமீறல்கள் இருப்பதாகவும் அதனை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு டிசம்பர் 7-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு விசாரணைக்கு வந்தது,அதில் விசாரணை முடியும் வரை புதிய கட்டுமானங்களை எழுப்பவோ, பழைய கட்டு மானங்களை இடிக்கவோ கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து அடிக்கல் நாட்டு விழா நடைமுறை செயல்பாடுகளுக்கு மட்டும் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி கட்டுமானப் பணிகள் நடைபெறக்கூடாது என்று இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,புதிய பாராளுமன்றம் கட்டும் திட்டத்தில் பிரதமருக்கான புதிய இல்லமும் கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து மத்திய அரசின் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாராளுமன்ற கட்டிடப் பணிகள் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிகுள்ளும்,பிரதமர் இல்ல கட்டுமனாப் பணிகள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள்ளும் முடிக்கப்படும் என்றும்,இதற்கு 13,450 கோடி என செலவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

21 hours ago