கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை இன்று இரவு 10 மணிக்குள் முடித்துக்கொள்ளுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவும் அச்சம் காரணமாகவும், உருமாறிய கொரோனா வைரஸ் பரவ அதிகளவில் வாய்ப்புள்ளதாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு, மாநில அரசுக்கு அறிவித்தது. தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேராவில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இரவு 10 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்துக்கொள்ளுமாறும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு முன், தமிழகத்தில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நட்சத்திர ஹோட்டல், கேளிக்கை விடுதிகளில் உள்ள பார்களை இரவு 10 மணிக்கு மூடவும், கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…