மும்பையில் பீர் தர மறுத்த நண்பர்களை கத்தியால் குத்திய கொலையாளியை, போலீசார் சில மணிநேரத்தில் பிடித்தனர். கத்தி குத்தப்பட்ட நபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த அஜய் டிராவிட்டும் அவரது சகோதரன் விஜய் இருவரும் பீர் ஆர்டர் செய்து குடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சோனு என்ற அவர்களது நண்பர் வந்துள்ளார்.
அவர் அஜய் டிராவிட் மற்றும் விஜயிடம் பீர் கேட்டுள்ளார். அதற்கு இருவருமே தர மறுக்கவே கோபமடைந்த சோனு, அங்கிருந்த ஐஸ் வெட்டும் கத்தியை கொண்டுஅஜய் டிராவிட் மற்றும் விஜயை சரமாரியாக குத்தியுள்ளான்.
இதில் படுகாயமடைந்த இருவரும் சத்தம் எழுப்பவே, அங்கு அருகில் இருந்த நண்பர்கள் ஓடி வருவதை கண்டு, சோனு அங்கிருந்து தப்பிவிட்டான். இதில், அஜய் டிராவிட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சோனுவை போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…