எத்தனை எதிரணி உருவாக்கப்பட்டாலும் பிரதமர் மோடி தான் நம்பர் 1 – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே!

Published by
Rebekal

பாஜகவுக்கு எதிராக எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் பிரதமர் மோடி தான் நம்பர் 1 என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மூன்றாம் அணியாக உருவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்போது டெல்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களை தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே அவர்கள் சந்தித்துள்ளார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ், எத்தனை அணிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அமைக்கப்பட்டாலும் அது ஒரு பொருட்டே இல்லை எனவும், மோடியின் தலைமை வலுவாக உள்ளதாகவும், இன்றைக்கும் அவர்தான் நம்பர் ஒன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சரத்பவார் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது, ஏனென்றால் மகாராஷ்டிராவின் பிரபலமான தலைவர், நிறைய நற்பணிகள் செய்த தலைவர். ஆனால் இன்றைய சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரத்தில் மட்டுமே உள்ளது. நகரத்துக்கு வெளியே எந்த மாநிலங்களிலும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இல்லை எனவும், இந்த அணியில் மம்தா பானர்ஜி இணைவாரா என்பது சந்தேகம் தான் எனவும் கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தில் வெற்றிபெற அனைவருக்குமே உரிமை உள்ளது, அனைவருக்கும் தேர்தலில் அணிகளை உருவாக்க உரிமை உள்ளது. ஆனால் நரேந்திர மோடியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என தெரிவித்துள்ளார். மேலும் சரத் பவர் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது என தன் நினைப்பதாகவும் வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 350 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

32 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

53 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago