சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த கிட்டுகளும் வாங்கப்படாது – ஐசிஎம்ஆர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த கிட்டுகளும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருள்களும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் இரண்டு நிறுவனங்களான குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாய் லிவ்ஸன் போன்ற நிறுவனங்களிடம் சுமார் 5 லட்ச ரேபிட் டெஸ்ட் கிட் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஆர்டர் செய்திருந்த நிலையில், முதற்கட்டமாக 3 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் இந்தியாவுக்கு வந்திருந்தன.

பின்னர் இந்த ரேபிட் கிட்டுகளை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது. கொரோனாவை விரைந்து பரிசோதனை செய்யும் கருவியான ரேபிட் டெஸ்ட் கருவி கொண்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் சில மாநிலங்களில் தவறான முடிவில் காட்டுகிறது என்று தொடர் புகார் எழுந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசுகளுக்கு ஐ.சி.எம்.ஆர் வலியுறுத்திருந்தது.

அதன்பின், ரேபிட் கிட்டுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்றும் பி.சி.ஆர் மற்றும் ஆர்.டி கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது அறிவிப்பு ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில், ரேபிட் டெஸ்ட் கருவி மாறுபட்ட முடிவுகளை காண்பிப்பதால், ரேபிட் கிட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் சீனா நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருள்களும் வாங்கப்படாது என ஐ.சி.எம். ஆர் அறிவித்துள்ளது. ஏற்கனவே வாங்கியிருந்த கிட்டுகளை திரும்ப அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த இரண்டு நிறுவங்களிடம் இருந்து வேற எந்த ஆர்டரும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago