காங்கிரசின் உடைந்த ஊன்றுகோலை பயன்படுத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை-பாஜக செய்தி தொடர்பாளர்

Default Image

காங்கிரசின் உடைந்த ஊன்றுகோலை பயன்படுத்த யாரும் ஆர்வம் காட்டவில்லை. 

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினர். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விடுதலை சிறுத்தைக் கட்சி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில்,  இந்த கூட்டம் குறித்து பாஜக செய்தி தொடர்பாளரும், எம்.பி-யுமான அணில் பலூனி அவர்கள்  கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு தன் மீது நம்பிக்கை இல்லாததால் தான் கூட்டணிகளை தேடுவதாகும், காங்கிரஸின் உடைந்த ஊன்றுகோலை பயன்படுத்த இப்போது யாரும் ஆர்வம் காட்டவில்லை என்றும் விமர்சித்துப் பேசியுள்ளார்.

மேலும் காங்கிரசின் எதிர்காலம் இருண்டு விட்டது. காங்கிரசை மக்கள் நிராகரித்து விட்டதாகவும், அதன் மீதான நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்து அவர் கூறுகையில், நாட்டை முன்னேற்ற மற்றும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று பிரதமர் மோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்று உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK STALIN - T N GOVT
CM MK Stalin
INDvsENG
Tiruchendur - Murugan Temple
vaibhav suryavanshi shubman gill
laura loomer donald trump