Categories: இந்தியா

பிரியாணியில் பீஸ் இல்லை! திருமண விழாவில் மோதிக்கொண்ட மக்கள்!

Published by
பால முருகன்

உத்தரபிரதேசம் : திருமணங்களின் போது அனைவரும் உணவு விரும்பி சாப்பிடுவது உண்டு. ஒரு சில இடங்களில் உணவில் எதாவது பூச்சி அல்லது உணவு சரியில்ல என்றால் சண்டை நடந்ததை நாம் கேள்விபட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில், பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ்கள் இல்லாததால் போனதால் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது.

மணமகன் தரப்பில் இருந்து வந்த விருந்தினர்கள் திருமணத்தில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணியில் சிக்கன் லெக் பீஸ் இல்லாததை பார்த்தவுடன் சண்டை தொடங்கியது. ஒருவர் இதனை புகாராக கூற ஆரம்பித்த நிலையில், முழுக்க முழுக்க சண்டையாக மாறியது.

அப்போது வாய் தகராறில் இருந்த சண்டை கை கலப்பாகவும் மாறியது. திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் ஒருவரையொருவர் உதைப்பது, குத்துவது மற்றும் நாற்காலிகளை வீசி சண்டைபோட்டு கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சண்டையை பார்த்த மணமகன் கூட குழப்பத்தில் ஈடுபட்டார்.

இரு குடும்பத்தினரும் கடுமையாக மோதிக்கொண்ட அந்த வீடியோவை இணையத்தில் மிகவும் பகிரப்பட்டு வருகிறது. மோதலை தொடர்ந்து அங்கிருந்த பெரியவர்கள் தலையிட்டு சண்டையை முடித்து வைத்தனர். இது தொடர்பான வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் விலங்குகள் கூட தங்கள் உணவை பகிர்ந்து கொள்வதில் மிகவும் சிறந்தவை என்று கூறி வருகிறார்கள்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் இதுவரை புகார்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.  முறையான புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

6 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

9 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

9 hours ago