உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் எண்ணெய் டேங்கர் ஒன்று காருடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று இரவு உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது எண்ணெய் டேங்கர் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தியதில், எண்ணெய் டேங்கர் காருடன் மோதியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விபத்து குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காரில் சென்ற அனைவருமே உயிரிழந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது உயிரிழந்தவரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…