உத்தர பிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்துள்ளது அந்த பள்ளி. அப்பள்ளியில் பயின்று வரும் எட்டாம் வகுப்பு மாணவன் ஒரு அரைநாள் விடுப்பு கேட்டு, கடிதம் எழுதுகிறான். அந்த விடுமுறை கடிதத்தில் என்ன எழுதியுள்ளது என்பதை கூட கவனிக்காமல், அந்த பள்ளி முதல்வர் அவருக்கு விடுப்பு அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த எட்டாம் வகுப்பு மாணவனின் பாட்டி இறந்து விட்டதாக தெரிகிறது. ஆதலால் பள்ளிக்கு அரைநாள் விடுப்பு கேட்டு பள்ளி முதல்வருக்கு அந்த மாணவன் கடிதம் எழுதுகையில், அந்த கடிதத்தில், தன் பாட்டி காலை 10 மணிக்கு இறந்துவிட்டதாக குறிப்பிடப்படுவதற்கு பதிலாக, தான் காலை 10 மணிக்கு இறந்துவிட்டேன். எனவே, எனக்கு அரை நாள் விடுப்பு தாருங்கள் என அந்த மாணவன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளான்.
இதனை கவனிக்காத பள்ளி முதல்வர் அந்த மாணவனுக்கு விடுப்பு வழங்கி அனுமதித்துள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…