ஆந்திராவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.!

Default Image

கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் ஆந்திர மாநில மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசிடமிருந்து தெளிவான அறிக்கை வரும் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று சுகாதார அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், சுகாதார பல்கலைக்கழக பதிவாளர் ஷங்கர், கொரோனா காரணமாக வெளிப்படையான எம்.பி.பி.எஸ் சேர்க்கைகளை நடத்த உயர் மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த குழு ஏற்கனவே பல பிரச்சினைகள் குறித்து விவாதித்து அரசிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் சேர்க்கை வெளிப்படையான முறையில் நடக்கும் என்று ஷங்கர் கூறினார். அரசு உத்தரவு நிறைவேற்றப்பட்ட பின் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்