தமிழகத்தின் மூன்றாவது மொழி! பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமாலையின் சூசக பேச்சு!

Default Image

கரூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், உத்திரபிரதேசத்தில், இளம்பெண் உயிரிழப்பு வழக்கு சம்பந்தமாக உயர் காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்றும், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அந்தந்த மாநிலங்களே மூன்றாவது மொழியை தேர்ந்தெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது  தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனையடுத்து, மூன்றாவது மொழி தேர்ந்தெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என அண்ணாமலை கூறி உள்ளது தமிழகத்தில் இந்தி மொழி அமல்படுத்தப்படும் என சூசகமாக கூறுவதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts