புதுச்சேரியில் கொரோனாவுக்காக பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் திருப்பி வழங்க உத்தரவு..!

Published by
Sharmi

புதுச்சேரியில் கொரோனாவுக்காக தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் செலவு செய்த தொகையை 3 மாதங்களில் புதுச்சேரி அரசு திருப்பி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை பரவலை சமாளிக்கும் வண்ணம் தனியார் மருத்துவமனையில் இலவசமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை மீறி அரியூரில் இருக்கும் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரியில், கொரோனாவுக்காக அனுமதிக்கப்படுபவர்களிடம் எக்ஸ் ரே, இசிஜி, ஸ்கேன் போன்றவற்றை கட்டாயப்படுத்தி எடுத்தும் அதற்கு கட்டணம் வசூலிக்கவும் செய்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஏ.ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார் மருத்துவமனைகள் இலவசமாக மருத்துவம் அளிக்க உத்தரவு வழங்க கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.  தற்போது இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.

இதில் வழக்கு பதிவு செய்தவர், புதுச்சேரி அரசு, தனியார் மருத்துவமனை முறையே எம்.என்.சுமதி, என்.மாலா, எல்.சுவாமிநாதன் ஆகிய வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அப்போது தனியார் மருத்துவமனை சார்பில் தெரிவித்ததாவது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த தொகையான ரூ.2.90 கோடியை வழங்க புதுச்சேரி அரசிற்கு பட்டியல் அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.

அரசு தரப்பில் தெரிவித்ததாவது, இந்த பட்டியலை சரிபார்த்து குறிப்பிட்டுள்ள தொகையை வழங்க கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தெரிவித்ததாவது,

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற உத்தரவின்படி, பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகையை அந்தந்த நபர்களுக்கு 3 மாதங்களுக்குள் திருப்பி வழங்க வேண்டும். அதேபோல் தனியார் மருத்துவமனைக்கு வழங்க வேண்டிய தொகையும் சரிபார்த்து வழங்கவும் கூறி புதுச்சேரி அரசிற்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

8 minutes ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

46 minutes ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

1 hour ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

2 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

2 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

4 hours ago