வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு தபால் வாக்களிக்கும் வசதியை வழங்குவதென தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிப்பது பற்றி சட்ட அமைச்சகத்திடம் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. புதிய முறைப்படி தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பும் லிங்கில் வெளிநாடு வாழ் இந்தியர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் தமிழக சட்டமன்ற தேர்தலிலேயே ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் முறையை செயல்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த பரிந்துரை கடந்த மாதம் அனுப்பப்பட்டிருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாரம் யெச்சூரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…