சிறுசேமிப்பு வட்டி விகிதத்தை குறைத்த மத்திய அரசின் முடிவு தவறு.! – ப.சிதம்பரம் கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் அத்தியாவசிய தேவைகளுக்காக இயங்கும் தொழில் நிறுவனங்கள் தவிர மற்றவை இயங்கவில்லை. இதனால் நாட்டில் பொருளாதார மந்த நிலை உருவாகும் சூழல் வந்துவிட்டது.
இதனை அடுத்து மத்திய அரசானது, சிறுசேமிப்பு மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டிவிகிதத்தை குறைப்பதக்க அறிவித்தது.
இந்த முடிவு குறித்து, முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிறுசேமிப்பு மற்றும் தொழிலாளர் வைப்பு நிதியின் வட்டிவிகிதத்தை குறைக்கும் மத்திய அரசின் முடிவு தவறானது. இந்த ஆலோசனை முட்டாள்தனமானது. அதனை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். எனவும் வலியுறுத்தினார்.
While reducing the interest rate on PPF and small savings may be technically correct, it is absolutely the wrong time to do so.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 1, 2020
I know that sometimes government acts on stupid advice, but I am amazed how stupid this advice was!
— P. Chidambaram (@PChidambaram_IN) April 1, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025