இந்தியா

டானா புயல்: 200 ரயில்கள் ரத்து, விமானங்கள் மற்றும் கப்பல் சேவை நிறுத்தம்!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான டானா புயல் ஒடிசா – மேற்குவங்கம் இடையே நாளை (25ம் தேதி) அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கரையை கடக்கும் பொழுது, காற்றின் வேகம் மணிக்கு 100-110 கிமீ வேகத்தில் 120 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், இரு தினங்களுக்கு பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் தயார் நிலையில் மீட்புப் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், […]

#Odisha 4 Min Read
Cyclone Dana

நெருங்கியது டானா., வங்க கடலோரங்களுக்கு ‘ரெட் அலர்ட்’.! வெளியான முக்கிய தகவல்.!

டெல்லி : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள டானா புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் தற்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனா தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இந்த புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதில், ” வடமேற்கு வங்கக் கடலில் “டானா” என்ற கடுமையான சூறாவளி புயல் நிலை கொண்டுள்ளது. இதனால் ஒடிசா […]

#Weather 4 Min Read
Dana Cyclone - Odisa

நாடு திரும்பிய மோடி… சீன அதிபருடன் சந்திப்பு! பிரிக்ஸ் மாநாட்டின் ஹைலட்ஸ்…

டெல்லி : பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றார்.  நேற்று முன் தினம் ரஷ்யாவில் 16ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டு, நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அதன்படி, ரஷ்யாவில் இருந்து இன்று அதிகாலை டெல்லிக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி. 10 வருடத்திற்கு முன்பு பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, தற்போது 2024 ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கடலந்து கொண்டார். […]

#China 13 Min Read
BRICS leaders

டானா புயல் எதிரொலி : கொல்கத்தா விமானம் நிலையம் நாளை இயங்காது!

மேற்கு வங்கம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் நாளை தீவிரமடைந்து வலுவான புயலாக மாறும் என முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளாக இன்று மேற்கு வங்கம், பெங்களுரு மற்றும் ஒடிசா மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்திருந்தனர். மேலும், ரயில் சேவைகளும் தடைபட்ட நிலையில், புயலால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க இந்திய கடற் படை தயாரான நிலையிலும் இருந்து வருகிறது. மேற்கொண்டு, பாதிப்புகள் ஏற்படும் ஒரு சில பகுதிகளுக்கு பொது […]

#Bengaluru 3 Min Read
Kolkata Airport

‘மியா கலிஃபா நல்லா இருக்கணும்’..! முதியவர் செய்த காரியம்…வைரலாகும் வீடியோ!

டெல்லி : வடமாநிலங்களில், விளையும் பயிர்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது கோதுமை தான். மேலும், கோதுமை தான் அங்கு அதிகமாகவே விளையும். இந்த விளைச்சலின் போது கணவன் நன்றாக இருக்க வேண்டும், தொழில் ரீதியாகவும் மன ரீதியாகவும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள பெண்கள் “கர்வா சௌத்” எனப்படும் விரதத்தை மேற்கொள்வார்கள். ஐப்பசி மதத்தின் நான்காவது நாளில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விரதத்தில் காலை முதல் இரவு வரை பெண்கள் உண்ணா நோன்பு இருப்பார்கள். […]

Karva Chauth 4 Min Read
Mia Khalifa

வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.!

வயநாடு : நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வெற்றிபெற்றார். அதே போல உ.பி ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலோடு வயநாடு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த […]

#Wayanad 5 Min Read
Congress Leader Priyanka Gandhi nomination in wayanad

“ரயில்களில் இதெல்லாம் கொண்டு வர வேண்டாம்” – தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!

டெல்லி : தீபாவளியை முன்னிட்டு, உங்கள் பண்டிகை பயணத்தை பாதுகாப்பாக மாற்றுவதற்கு ரயில்களில், பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்து செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே அறிவுறித்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தனது எக்ஸ் பக்கத்தில், எளிதில் தீப்பற்ற கூடிய அல்லது பட்டாசுப் பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வது, ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 67 இன் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ரயில்வே சட்டம் 1989 இன் பிரிவு 164 மற்றும் […]

Diwali Celebration 4 Min Read
Diwali Safety Train Journey

டானா புயல் எதிரொலி: இந்த மூன்று மாநில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

ஒடிசா : மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவான டானா புயல், நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பின்னர், அது வடக்கு ஒடிசா மற்றும் மேற்குவங்க கடற்கரை பகுதிகளில், பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய  மூன்று […]

#Bengaluru 5 Min Read
rain school holiday

கனமழை கோரம்: பெங்களூரில் 6 மாடி கட்டிடம் இடிந்து விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கார்கள், பைக்குகள், பேருந்துகள் சாலைகளில் மிதக்கின்றன. இதனால் பெங்களூருவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிழக்கு பெங்களூரு பாபுசபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த 6 மாடிக் கட்டடம், கனமழையால் இடிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 17 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. […]

#Bengaluru 3 Min Read
Bengaluru Building Collapse

முதல்முறையாக தேர்தல் களம் காணும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல்.!

கேரளா: வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக ஒரு நாள் முன்பு (நேற்றைய தினம்) வயநாடு சென்றடைந்தார். அத்துடன் இடைத்தேர்தல் களத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #வயநாட்டில் உள்ள ஒரு உள்ளூர் குடும்பத்திற்கு இதயப்பூர்வமான விஜயம் செய்து, சமூகத்துடனான அவரது இரக்கத்தையும் தொடர்பையும் வெளிப்படுத்தினார் அன்பு தலைவி […]

#Priyanka Gandhi 5 Min Read
Wayanad Election PriyankaGandhi

டானா புயல் எதிரொலி : 28 ரயில் சேவைகள் ரத்து..! முழு விவரம் இதோ!

டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும் எனவும் தெரிவித்திருந்தனர். மேலும், உருவாகவுள்ள புயலுக்கு டானா எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த டானா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் அக்.-24 அன்று இரவு அல்லது அதற்கு அடுத்த நாள் அக்.-25ம் தேதி அதிகாலையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை […]

28 train services cancelled 8 Min Read
Southern Railway Announcement

டானா புயல் எப்போது கரையை கடக்கும்? இந்திய வானிலை மையம் அலர்ட்!!

ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, புயல் கரையை எப்போது கடக்கும் என்பது பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எப்போது கரையை கடக்கும் இதனால் எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்பது பற்றியும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (21-10-2024) மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் […]

#IMD 5 Min Read
Dana Cyclone Update

இதை யாரும் எதிர்பாக்கல..! 7 புதிய சேவைகளுடன்… புதிய லோகோவில் BSNL..!

டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய லோகோவை இன்று, அக்.-22 (செவ்வாய்க்கிழமை) அறிமுகப்படுத்தி இருக்கிறது. அத்துடன், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 7 புதிய சேவைகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இன்று டெல்லியில், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவில், BSNL-ன் இந்த புதிய லோகோவையும், 7 புதிய அம்சத்தையும் அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கி வைத்தார். புதிய லோகோ : […]

Bharat Sanchar Nigam Limited 5 Min Read
BSNL New Logo

16வது பிரிக்ஸ் மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி!

டெல்லி : 16வது ஆண்டு BRICS உச்சி மாநாடு இன்று ரஷ்யாவின் கசான் நகரில் தொடங்குகிறது. இந்த உச்சி மாநாடு இன்று முதல் அக்டோபர் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவுள்ளனர். இந்நிலையில், 2 நாட்கள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். இப்பொது, ரஷ்யா […]

16th BRICS Summit 4 Min Read
pm modi
School leave

புதுச்சேரி தவெக மாநில செயலாளர் சரவணன் திடீர் மரணம்.. கண்ணீர் விட்டு கதறிய ஆனந்த்.!

புதுச்சேரி : தவெக மாநாட்டுப் பணிகளை பார்வையிட்டு வீடு திரும்பிய புதுச்சேரி மாநில செயலாளர் சரவணன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் விக்கிரவாண்டி சென்று மாலை வீடு திரும்பிய அவர், நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். உடனே அவரை, குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும்  வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மறைவிற்கு தவெகவினர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அஞ்சலிக்காக வைக்கபட்டறிந்த சரவணனின் உடலை பார்த்து, அவரது மறைவை தாங்க […]

#Puducherry 3 Min Read
TVK Saravanan RIP

மிரட்டப்படும் இந்திய விமானங்கள்.. வெடிகுண்டு மிரட்டல் வந்தால் என்ன நடக்கும்?

டெல்லி : கடந்த ஒரு வாரமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19ம் தேதி சுமார் 30 விமானங்கள் உட்பட, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து செல்லும் இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட விமான நிலையங்களில் 90க்கும் மேற்பட்ட வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதால் பயணிகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இந்த […]

air india 6 Min Read
airlines bomb threat

பாலித்தீன் பையில் வெடிகுண்டு., பொறுப்பேற்றதா காலிஸ்தான்.? வெளியான பரபரப்பு தகவல்கள்…

டெல்லி : தலைநகர் டெல்லியில் ரோகினி செக்டார் பகுதியில் செயல்பட்டு வரும் சிஆர்பிஎப் பள்ளியில் நேற்று பயங்கர சத்தத்துடன் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த வெடி விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து டெல்லி சிறப்புபிரிவு போலீசார், தேசிய புலனாய்வு குழுவினர், தேசிய பாதுகாப்பு படையினர் என பல்வேறு விசாரணை குழுவினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து […]

#Blast 4 Min Read
Delhi CRBF School Bomb Blast

என்னதான் ஆச்சு நம்ம டெல்லிக்கு.? வீதி வீதியாய் சுற்றும் ஸ்ப்ரே வாகனம்.!

டெல்லி : தலைநகர் டெல்லி காற்று மாசுவால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவில் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் பயிர் கழிவுகள் காரணமாகவும், அதீத வாகன பயன்பாடு காரணமாகவும் டெல்லி காற்றின் தரம் மிக மோசமாக மாறி வருகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கள்) டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் AQI அளவீட்டின் படி 300ஐ கடந்துள்ளது. அதிகபட்சமாக ஆனந்த் விஹாரி பகுதியில் AQI அளவீடு 361ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக சராசரி […]

#Air pollution 5 Min Read
Air Pollution

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!

பெங்களூரு: பெங்களூருவில் வெளுத்து வாங்கிவரும் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அந்த வகையில், ஒக்கலிபுரம், ரிச்மண்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரின் அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தும். இதனால், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி […]

#IMD 3 Min Read
School in Bangalore