டெல்லி : நாளை (நவம்பர் 5) மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில், எந்தெந்த நாட்களில் எந்த நேரத்தில் சேவை கிடைக்காது மற்றும் எந்தெந்த ஆப்ஸ் மற்றும் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதன்படி, MobileBanking, Gpay, WhatsApp Pay, Paytm, Mobikwik 2 சேவைகளும் மற்றும் HDFC வங்கியில் நடப்பு […]
டெல்லி : கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறவிருந்த 14 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு நவம்பர் 13 ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்துள்ளது. முன்னதாக, வாக்குப்பதிவு நவம்பர் 13ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கலாச்சாரம் மற்றும் சமூக பண்டிகைகள் குறிப்பிட்ட தேதிகளில் […]
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி என இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த நளினியை சந்தித்து பேசியது […]
உத்தராகண்டம்: இன்று கர்வால் மோட்டார்ஸ் பேருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தின் குபி அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ராம்நகரில் உள்ள பவுரி-அல்மோரா எல்லையில் 200 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட போது பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அத்துடன் ஆம்புலன்ஸ்க்கும் தகவலை தெரிவித்தனர். […]
கேரளா : மாநிலம் பாலக்காட்டில் உள்ள ஷோரனூர் அருகே ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 ரயில்வே துப்புரவுத் தொழிலாளர்கள் சனிக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நான்கு ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனவும், அதில் இரண்டு, ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது. பாரதபுழா ஆற்றுப்பாலத்தில் உள்ள தண்டவாளத்தை கிடைத்த குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கேரளா எக்ஸ்பிரஸ் வந்ததால், அதனைக் கவனிக்காமல் தண்டவாளத்தில் சிக்கிய அந்த நான்கு தொழிலாளர்கள் ரயிலில் மோதி பக்கத்தில் இருந்த […]
டெல்லி : ஒரு அரசியல் கட்சிக்குத் தேர்தலின் போது வியூகம் வகுத்துக் கொடுத்து பிரச்சாரம் முதல் தேர்தல் முடியும் வரை அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்கள் இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ளது. அமெரிக்கத் தேர்தலில் கூட இது போன்ற நிறுவனங்களின் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் இது போல வியூகம் அமைத்துக் கொடுப்பதில் அதிகம் பேசப்படும் பெயர் என்றால் அது பிரஷாந்த் கிஷோர் தான். கடந்த 2014-ம் ஆண்டு மோடி அரசு இந்தியாவில் ஆட்சியமைக்க போது,IP-PAC […]
டெல்லி : பிரதமரை மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை அளித்துவிட்டு காங்கிரஸ் ஏமாற்றிவிட்டதாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது ” உண்மைக்குப் புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது ஆனால் அவற்றை முறையாக செயல்படுத்துவது கடினமானது அல்லது சாத்தியமற்றது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது.பிரச்சாரத்திற்குப் பிறகு பிரச்சாரம் அவர்கள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கிறார்கள், அவர்களால் ஒருபோதும் வழங்க முடியாது என்பது நன்றாகவே […]
புதுடெல்லி : தீபாவளி தினத்தன்று டெல்லியின் நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான குழப்பான சிசிடிவி காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியும் வருகிறது. வீடியோவில் இருவர் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு இருக்கிறார்கள். இருவர் அந்த பகுதியில் ஒருவர் பைக்கில் மற்றொருவருடன் பேசிக்கொண்டு வருகிறார்கள். பிறகு திடீரென எதோ பேசிக்கொண்டு ஒருவர் வீட்டிற்குள் செல்ல பைக்கில் வந்தவருடன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென வேகமாக […]
புதுச்சேரி : 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய மண்ணைவிட்டு ஆங்கிலேயர்கள் சென்று இந்தியா விடுதலை பெற்ற தினமாகும். அதனால் ஆகஸ்ட் 15ஆம் தேதியை நாம் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த நாள் புதுச்சேரிக்கு மட்டும் மாறுபடும். நாம் ஆகஸ்ட் 15 கொண்டாடினால், அவர்கள் ஆகஸ்ட் 16ஆம் தேதி தேசிய கொடியேற்றுவர். மேலும் நவம்பர் 1ஆம் தேதியை ஆண்டு தோறும் சுதந்திர தினமாக கொண்டாவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பின்னால் சிறிய வரலாற்று […]
புது தில்லி : தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது என்றாலே மக்கள் புதுத்துணி எடுப்பது மட்டுமின்றி தங்கம் வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவது உண்டு. தமிழகத்தில் தீபாவளிக்கு முந்திய நாட்களில் மக்கள் தங்கம் வாங்குவது போல, வட மாநிலங்களில், தீபாவளிக் கொண்டாட்டங்களில் முதல்நாளாக கொண்டாடப்படும் “தந்தேரஸ் பண்டிகை” அன்று தங்கம் வாங்க இந்த சமயங்களில் நகை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். தந்தேரஸ் என்றும் அழைக்கப்படும் இந்த விழா, அக்டோபர் 29, செவ்வாய்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. எனவே, இந்த […]
கேரளா : காசர்கோடு மாவட்டத்தில் நீலேஸ்வரம் பகுதியில் வீரராகவர் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக கோயில் அருகே ஒரு சேமிப்பு கிடங்கில் பட்டாசு வைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த பட்டாசு கிடங்கில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த பட்டாசு தீ விபத்தில் இதுவரை 150 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் காசர்கோடு, கண்ணூர், மங்களூரு பகுதி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தகவலறிந்து, தீயணைப்பு […]
சென்னை : தவெக கட்சியின் முதல் மாநில மாநாடானது நேற்று விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 13 லட்சம் தொண்டர்கள் வருகை தந்தாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற அந்த மாநாட்டில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார். அவரது அந்த மேடைப் பேச்சின் எதிரொலியாக பல கட்சித் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என அனைவரும் வாழ்த்துகளை அவர்களது எக்ஸ் தளத்தில் தெரிவித்து வந்தனர். […]
புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு, தீபாவளிக்கு முந்தைய நாளான புதன்கிழமை (30.10.2024) அன்று பொது விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செலாவணி முறிச்சட்டத்தின் கீழ், விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அன்றைய நாளன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், நவம்பர் 2ஆம் தேதி கல்லறை நாள், 3 […]
டெல்லி : டிஜிட்டல் கைது என்ற பெயரில் பொதுமக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். மனதின் குரல் என்ற பெயரில் பிரதமர் மோடி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அது போல நேற்று நடைபெற மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “டிஜிட்டல் கைது என்ற மோசடியில் தொலைபேசியில் அழைப்பவர் போலீஸாகவோ, சிபிஐயாகவோ, போதைப் பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்தவராகவோ, ரிசர்வ் வங்கிக்காரராகவோ […]
லடாக் : கடந்த 4 ஆண்டுகளாக எல்லையில் இந்தியா-சீனா இடையே நிலவி வந்த பதற்றம் தற்போது மெல்ல மெல்ல முடிவுக்கு வருகிறது. அதாவது, கிழக்கு லடாக் பகுதியில் உள்ள டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இந்தியா மற்றும் சீனா இராணுவத்தினர் படைகளை விலக்கி வருகின்றனர். இருப்பினும், இரு நாட்டு படைகளும் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #WATCH | Leh, Ladakh | On the agreements […]
பெங்களூரு : கனமழை எதிரொலியாக பாபுசபால்யாவில் கட்டுமானத்தில் இருந்த 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது. இடிபாடுகளில் மேலும் ஒருவர் சிக்கி இருக்கலாம் என்பதால், தொடர்ந்து 4வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கட்டிட உரிமையாளர், அவரது மகன் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த […]
ஜம்மு- காஸ்மீர் : நேற்று பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் போர்ட்டர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இந்த தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ராணுவத்துக்கு சொந்தமான ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) வாகனம் குல்மார்க் ஸ்கை ரிசார்ட் அருகே போடாபத்ரியில் உள்ள சௌக் பகுதியில் நின்று கொண்டு இருந்தது. அப்போது,இதனை நோட்டமிட்டிருந்த பயங்கரவாதிகள் வாகனம் மீது நேற்று மாலை திடீரென துப்பாக்கிச் சூடு […]
ஒடிசா : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டானா, தீவிர புயலாக நள்ளிரவில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே இரவு 1.30 மணி முதல் 3.30 மணி வரை கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புயல் கரையை கடக்கையில் மணிக்கு 100-110 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதாகவும், ஒடிசா […]
ஒடிசா : மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டாணா புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா – ஒடிசாவின் தாமரா இடையே தீவிர புயலாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்நிலையில், டானா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில், நேற்று மாலைக்குள் 5.84 லட்சம் […]
ஒடிஷா : வங்கக்கடலில் உருவாகியுள்ள டானா புயல் எப்போது கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் லேட்டஸ்டான தகவல் ஒன்றை கொடுத்து இருந்தது. அதன்படி, நள்ளிரவு முதல் அக்டோபர் 25 ஆம் தேதி காலை வரை கடுமையான சூறாவளி புயலாகவே வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை ஒட்டியுள்ள பூரி மற்றும் சாகர் பகுதிகளுக்கு அருகில் பிதர்கனிகா மற்றும் டமாரா (ஒடிசா) இடையே கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது […]