கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே, பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் இன்று என்பதால் வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். “I LOVE Wayanad” என்று அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற டிசர்ட் அணிந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது அவரை பார்த்த ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர். […]
ஆக்ரா : உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் செயல்பட்டு வரும் ஒரு பழைய பைக் ஷோ ரூமில் டீ கடைக்காரரை அப்பா எனக்கூறி ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக்கை ஒரு இளைஞர் திருடி சென்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் பழைய பைக் ஷோ ரூம் ஊழியர் செய்தியாளர்களுக்கு அளித்த தகவலின்படி, கடந்த நவம்பர் 3ஆம் தேதி சாஹில் என்ற இளைஞர் பைக் ஷோ ரூம் வந்துள்ளார். அங்குள்ள ரேஸிங் பைக்குகளை பார்த்துவிட்டு, அதில் […]
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ்த்திரையுலகில் ஒரு பேரிடியாக அமைந்திருக்கிறது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரையில் பலரும் நேரிலும், சமூக தளத்திலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக கட்சித் தலைவர் விஜய், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்தனர். அந்த வரிசையில் […]
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு முக்கியமான காரணமே, அந்த கொலை செய்த கொலையாளி கொலை செய்யச் சொன்னவர்கள் மீது புகார் அளித்தது தான். அதாவது, கடந்த ஜூன் 7, 2023 அன்று, வழக்கறிஞர் அஞ்சலி என்பவர் பால் பண்ணையிலிருந்து திரும்பும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் யஷ்பால், பாட்டியா, சர்மா, நீரஜ் சோப்ரா உட்பட மொத்தம் 5 பேர் கைது […]
குஜராத் : பொதுவாக, ஒரு மனிதன் இறந்த பிறகு, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்வது வழக்கம். அதேபோல், நாய், பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளும் இறக்கும் போது, அவற்றை அன்புடன் வளர்த்தவர்களும் அவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறோம். நீங்கள் எப்போதாவது ஒரு காருக்கு இறுதிச்சடங்கு செய்வதை பார்த்திருக்கிறீர்களா? குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. அட ஆமாங்க… குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் போலாரா என்பவர், 12 […]
லக்னோ : உத்திர பிரதேச மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு விதமாக பரிந்துரைகளை அம்மாநில மகளிர் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் அண்மையில் லக்னோவில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்து கொண்ட மகளிர் ஆணைய உறுப்பினர்கள், பெண்களின் பாதுகாப்பானது பொது இடங்கள் மற்றும் வணிக பயன்பாட்டு இடங்களில் உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சி மையம், முடித்திருத்தும் நிலையம் ஆகியவற்றில் பெண்களுக்கு பெண் பயிற்சியாளர்கள், பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் […]
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிக்கும் வரும் நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணியும் களம் காண்கின்றனர். இந்த தேர்தலுக்காக பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பேசிய தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் பிரதமர் மோடி, இன்று அகோலா […]
ஹவுரா : மேற்குவங்க மாநிலத்தில் ஹவுரா அருகே செகந்திராபாத்-ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் 40.கி.மீ வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கொண்டிருந்த போதே திடீரென நான்கு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அந்த பெட்டியிலிருந்த பயணிகள் தடம் புரண்டதால் உள்ளே சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உடனே, சம்பவ இடத்திற்கு ரயில்வே துறை அதிகாரிகள் நேரில் விரைந்து தடம் புரண்ட பெட்டிக்குள் சிக்கி இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, தடம் புரண்ட பெட்டிகளிலிருந்த […]
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது. அது என்ன சம்பவம் என்றால், அந்த பகுதியில் ட்ராபிக் காவல்துறையினர் எந்தெந்த வாகனங்களில் கருப்பு நிற ஸ்டிக்கர்ஸ் ஒட்டி இருக்கிறது என்பதைச் சோதனை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது, சையத் மஜூத்தீன் நசீர் என்ற நபர் ஓட்டிய ஒரு கார் அந்த பகுதிக்கு வந்துள்ளது. அதனைப் பார்த்த காவல் அதிகாரி ஒருவர் காரை நிறுத்து சோதனை செய்யவேண்டும் என்பது […]
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அண்மையில் ஓர் புயலை கிளப்பினார். இந்த விவகாரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில், திருப்பதி லட்டு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திரா மாநில அரசு மீது […]
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார். அந்த அருகாட்சியகம் குறித்து சந்திரசூட் கூறுகையில், ” இந்த அருங்காட்சியகம் நமது தேசத்தில் நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இந்த அருங்காட்சியகம் தற்போது தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” எனக்கூறி, ” நீதியை வழங்குவதில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார். அந்த நீதிமன்ற அருங்காட்சியகத்தில் AI தொழில்நுட்ப உதவியுடன் ஒரு டிஜிட்டல் வழக்கறிஞர் திரை ஒன்று அறிமுகம் […]
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இதற்கு பாஜக எம்எல்ஏக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இது வாக்குவாதமாக முற்றி அதன்பின் கைகலப்பு, தள்ளு முள்ளாக மாறியது. இதனால், சபாநாயகர் அப்துல் ரஹீம் ராதர் நேற்று முழுவதும் அவையை ஒத்தி வைத்தார். இந்த நிலையில் […]
பெங்களூரு : ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் நிலை தடுமாறி ஓடிய பேருந்தை தனது சாமர்த்தியமான செயலால் நடத்துநர் நிறுத்தி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும், தனது துரீத செயலால் பேருந்தை நிறுத்தி பயணம் செய்த பயணிகளின் உயிரைக் காப்பற்றிய நடத்துநருக்கு பலரும் நன்றியும், பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை (நவ-4) அன்று பெங்களுருவில் யஷ்வந்த்பூர் என்னும் அருகே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இது தொடர்பாக […]
டெல்லி : இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஆனது கடந்த 2019இல் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக அவை பிரிக்கப்பட்டது. இந்த சட்டப்பிரிவு நீக்கத்திற்கு பிறகு அண்மையில் தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்து, உமர் அப்துல்லா முதலமைச்சரானார். அப்போது முதலே […]
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பிஎம் வித்யாலட்சுமி (PM Vidhyalakshmi) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. உயர்கல்வி படிக்க விரும்பும் தகுதி உள்ள மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று உயர்கல்வி படிக்கலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தில் அதிகபட்சம் ரூ.10 லட்சம் ரூபாய் வரை மாணவ, மாணவிகள் கடனுதவி பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ரூ.7.50 லட்சம் வரை மத்திய அரசின் உத்தரவாதம் […]
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தொடங்கிய தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே முன்னிலைப் பெற்று, 538 மாகாணங்களில் 277 இடத்தில் வெற்றிப் பெற்று அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வாகி உள்ளார் டொனால்ட் டிரம்ப். இந்த நிலையில், ட்ரம்பின் ஆதரவாளர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர். மேலும், வெற்றி பெற்றதை அறிவித்த பிறகு அவரது ஆதரவாளர்கள் முன்னாள் டிரம்ப் […]
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். இந்நிகழ்வு பாராளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த குளிர்கால கூட்டத்தொடரை வரும் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடத்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததாக கிரண் ரிஜிஜு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 26-ஆம் தேதி, அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டதன் 75-வது ஆண்டு விழா சம்விதன் […]
பெங்களூர் : தீபாவளி இரவில் நடந்த துயர சம்பவத்தில் 32 வயது சபரீஷ் என்ற நபர் உயிரிழந்தார். இவருடைய இறப்புக்குக் காரணம் அவர்கள் நண்பர்கள் கொடுத்த தேவையில்லாத சவால் தான் காரணம். ஏனென்றால், தீபாவளி பண்டிகை அன்று சபரீஷ் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடி வந்தார். அப்போது அவருடைய நண்பர்கள் ஆபத்தான முறையில் ஒரு சவாலைச் செய்யச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். மதுபோதையில் அவருடைய நண்பர்கள் பெரிய ரக பட்டாசு ஒன்றைக் கீழே வைத்துக்கொண்டு அதன்மீது கார்ட் போர்ட் […]
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத குழுவினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கோயிலிலிருந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். கனடாவில் அமைந்துள்ள தூதரக முகாமிற்கு இந்திய அதிகாரிகளின் வருகையைக் கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிராம்ப்டனில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஹிந்து கோயிலின் முன்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். மேலும், கோயிலிலிருந்த […]
உத்தரப்பிரதேசம் : ஆக்ரா அருகேIAF-ன் MiG-29 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரிலிருந்து விமானம் புறப்பட்டு, பயிற்சிக்காக ஆக்ராவுக்கு சென்று கொண்டிருந்தபோது நேரிட்ட விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்திற்கு முன்பே விமானத்தில் இருந்து விமானி பாராசூட் மூலம் பத்திரமாக வெளியேறி உயிர் தப்பியதாக பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது. போர் விமானம் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ???? A MiG-29 fighter […]