டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார் . ஆம் ஆத்மி கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், நேற்று கட்சி, அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், பதவி விலகிய 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) இன்று டெல்லி பாஜக அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார். இதனால், கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, டெல்லியின் போக்குவரத்து […]
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில் நட்வர்பாய் மெத்தானியா (18 வயது) முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். மேலும், அக்கல்லூரியின் விடுதியில் தங்கி தனது படிப்பை படித்துக் கொண்டு வருகிறார். இவரையும், இவருடன் சேர்த்து 10 மாணவர்களையும் கடந்த சனிக்கிழமை (நவ-15) அன்று அதே கல்லுரி விடுதியில் இருக்கும் சீனியர்கள் ஒரு சிலர் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். வெகு நேரம், கிட்டத்தட்ட […]
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம் ஆத்மி கட்சி பதவி என அனைத்தில் இருந்தும் தன்னை விடுவித்து கொண்டார். கைலாஷ் கெலாட், டெல்லி மாநில போக்குவரத்துத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட துறை அமைச்சராக பொறுப்பில் இருந்து வந்தார். அவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எழுதிய கடிதத்தில், டெல்லி எம்எல்ஏவாகவும், மாநில அமைச்சராகவும் மக்கள் […]
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் போரோபெக்ரா என்னும் கிராமத்தில் கடந்த 11ம் தேதி நடந்த துப்பாக்கி சண்டையில், நிவாரண முகாமை தாக்கியுள்ளனர். இதில், ஆறு பேர் கலவரக்காரர்களால் கடத்தப்பட்டனர். தற்பொழுது, ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் நேற்று (வெள்ளிக் கிழமை) இரவு முதல் மீண்டும் பதற்றமான சூழல் நிலவத் தொடங்கியது. இப்படி இருக்கையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று இரவு பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் பைரன் சிங்கின் வீட்டைத் தாக்க முயற்சி செய்ததால் […]
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக மற்றும் திராவிட சிந்தத்தைப் பேசும் நபர்களைத் தாக்கி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இப்படி இருக்கையில் சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பங்கேற்று ஆவேசமாகப் பேசினார். அதில் அவர், “300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு […]
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் உயர் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் 10 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அங்கு 54 குழந்தைகள் இருந்த நிலையில், 37 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 7 குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில், கயானா நாட்டிற்கு புறப்பட்டார். அதற்கான தனி விமானத்தில் பிரதமர் மோடி புறப்படும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில் பிரதமர் மோடி குறிப்பிடுகையில், “அடுத்த சில நாட்கள், நான் நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருப்பேன். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவை மேம்படுத்த […]
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது. இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கினர். இன்று முதலே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை ஆரம்பமாகிவிடும். மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை சமயங்களில் ஐயப்ப பக்ததர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். அப்போது கூட்ட […]
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம் குழந்தைகள் 10 பேர் பலியாகினர். பிறந்த குழந்தைகளின் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தின்போது, குழந்தைகள் வார்டில் 54 பேர் இருந்த நிலையில், 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் 16 குழந்தைகள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். சரியாக, இரவு 10.30 முதல் 10.45 மணிக்குள் இந்த […]
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிவித்து 48 நாட்கள் விரதம் மேற்கொண்டு சுவாமியைத் தரிசனம் செய்வார்கள். இந்த முறை (நவ.16) கார்த்திகை ஒன்றாம் தேதி பக்தர்கள் கோவிலுக்குச் சென்று மாலை அணிவித்து தரிசனம் செய்ய வருகை தரவுள்ளனர். இந்நிலையில், இதனை முன்னிட்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. […]
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி கிடைக்காததால் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்துக்கு வருகை தந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2-ம் கட்ட சட்டசபை தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. எனவே, இதனைமுன்னிட்டு பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் […]
புதுச்சேரி : வரும் நவம்பர் 15-ஆம் தேதி குருநானக் ஜெயந்தி உலகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த நாளில் மாட்டு புறநோயாளிகள் பிரிவு இயங்காது என ஜிப்மர் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிக்கையில் ” மத்திய அரசு விடுமுறை தினமான 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு […]
சென்னை :இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது .இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள் என்கிறார் ஜவஹர்லால் நேரு.. தேசத்தின் வளர்ச்சிக்கு குழந்தைகள் விதையாக நடப்படுகின்றனர். ஏனென்றால் பிற்காலத்தில் அவர்கள் தான் நாட்டின் தலைவர்களாக உருவெடுக்கின்றனர். குழந்தைகள் தினம்; 1856 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சார்லஸ் லியோனட் என்ற பாதிரியாரால் குழந்தைகள் தினம் தொடங்கப்பட்டது .இந்த நாள் பூக்கள் ஞாயிறு என்று கூறப்பட்டு வந்தது .பின்பு குழந்தைகள் நாள் என […]
கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார், அதைப்போல, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் முகேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் என மொத்தமாக 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 14.71 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட வயநாடு தொகுதியில் இன்று ( நவம்பர் 13) காலையில் வாக்குப்பதிவு […]
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் முன்னதாக நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. அவர் தற்போது உ.பி மாநிலம் ரேபரேலி தொகுதி எம்பியாக இருக்கிறார். வயநாடு இடைத்தேர்தல் மூலம் முதன் முறையாக தேர்தல் வாக்கு அரசியலில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, […]
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15 மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குபதிவு தொடங்கியுள்ளது. மீதமுள்ளு 38 தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 43 தொகுதிகளில் மொத்தம் 73 பெண் வேட்பாளர்கள் உட்பட 683 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் ஜார்கண்ட் முத்தி மோர்ச்சா (JMM) 30 தொகுதிகளிலும், பாஜக […]
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஜார்கண்ட் தேர்தல் : 81 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் நவ-13 மற்றும் 20-இல் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் வரும் […]
டெல்லி : சி.பி.எஸ்.இ வாரியம் எப்போது 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும் என மாணவர்கள் அனைவரும் காத்துள்ளனர். இந்நிலையில், தற்போது தேர்வுக்கான அட்டவணை எப்போது வெளியிடப்படும்? சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தியரி தேர்வுகள் தொடங்கும் தேதிகள் பற்றிய விவரம் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம் வருகின்ற நவம்பர் 28-ஆம் தேதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போல […]
இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையேயான மோதல் கடந்த மே மாதம் தீவிரமடைந்தது. அதன் பிறகு, குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது பிரச்சனை சற்று குறைந்து இருந்தது. இருந்தாலும், இன்னும் சில இடங்களில் அங்கங்கே தாக்குதல்கள் நடைபெற்றாலும், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாத நிலை இருந்து வந்தது. இப்படியான சூழலில் நேற்று மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி இன […]
மணிப்பூர் : ஜிரிபாம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. அசாமின் எல்லையோர மாவட்டத்தில் குக்கி தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சிலரும் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சந்தேகத்திற்குரிய குகி தீவிரவாதிகள் ஜிரிபாமில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது முதலில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்பிறகு, பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையத்தை ஒட்டி உள்நாட்டில் […]