101 வயதில் 18 படி ஏறி சபரிமலை ஐயப்பனை முதன் முறையாக தரிசித்த மூதாட்டி.!

Published by
மணிகண்டன்

கார்த்திகை மாதம் துவங்கி விட்டது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து செல்லும் பக்தர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பித்து சபரிமலை சென்று தரிசித்து வருகின்றனர். இதனால் சபரிமலை ஐயப்பன் கோயில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே செல்கிறது.

பக்தர்கள் வருகையை சமாளிக்க தேவசம்போர்டு , கேரள காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 10 வயது முதல் 50 வயதுக்குள்ளான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் சபரிமலை வருவதுண்டு.

வழக்கத்தை விட அதிகம்… சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.!

கேரளாவில் 100 வயதை கடந்த ஒரு மூதாட்டி முதன் முறையாக ஐயப்பனை தரிசிக்க சபரிமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கேரளா மாநிலம், வயநாட்டில் உள்ள மூன்னானகுழியைச் சேர்ந்த பாருக்குட்டியம்மா எனும் 101 வயது மூதாட்டி தனது பேரன்களுடன் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க சென்றுள்ளார்.

வயது முதிர்ந்த மூதாட்டி என்பதால் பாதுகாப்பு அதிகாரிகள் பத்திரமாக அவர்களை அழைத்து 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்க சிறப்பு தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது. 1923 ஆம் ஆண்டு பிறந்த பாருக்குட்டியம்மா, தனது சிறுவயதில் கோயிலுக்குச் செல்ல ஆசைப்பட்டதாகவும்,  அது நடக்கவில்லை என்றும், அதன்பிறகு 100 வயதை கடந்த பிறகு கோயிலுக்குச் செல்ல முடிவு செய்து வந்தததாக கூறினார்.

100 வயதை கடந்து ஐயப்பனை தரிசித்த அந்த மூதாட்டிக்கு தேவசம்போர்டு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. பம்பை நதியில் இருந்து டோலி மூலம் சபரிமலை வந்துள்ளார் பாருக்குட்டியம்மா.

Recent Posts

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

47 minutes ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

1 hour ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

2 hours ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

2 hours ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

3 hours ago