கர்நாடகாவில் பஸ், ரயிலை இயக்க அனுமதி என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்குவதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில், கர்நாடகாவில் 3 வது ஊரடங்கு நேற்று முடிவடையும் தருவாயில் மேலும் 2 நாள் அதாவது மே 19 நள்ளிரவு வரை நீட்டித்து அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. தற்போது, கர்நாடகாவில் பஸ் மற்றும் ரயில் சேவைக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் போக்குவரத்தை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சலூன் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் கொரோனாவால் 1147 பேர் பாதிக்கப்பட்டு, 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…