நாளை முதல் மெட்ரோ ரயில்களில் நின்று செல்ல அனுமதி..!

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், நாளை முதல் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் நின்றுகொண்டே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ), லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கலந்துகொண்ட கூட்டத்தில் நாளை முதல் அனைத்து கட்டுப்பாடுகளையும் திரும்பப் பெறவும், முகமூடி அணியாததற்கான அபராதத்தை 2,000 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள வழங்கிய சமீபத்திய வழிகாட்டுதலில் நாளை முதல் முன்னர் விதிக்கப்பட்ட அனைத்து தடைகள் அல்லது கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் எந்த தடையும் இல்லாமல் மெட்ரோவில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, அவர்கள் நின்று மற்றும் அமர்ந்து பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது
நாள் முழுவதும் பயணிகள் நுழைவதற்கு வசதியாக மெட்ரோ நிலையங்களின் அனைத்து வாயில்களும் திறந்தே இருக்கும் என கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025