சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஒரு விவசாய அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிசான் யூனியன் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மூன்று புதிய சட்டங்கள் விவசாயத்தை வணிகமயமாக்குவதற்கு வழி வகுக்கும் என்று இந்திய கிசான் யூனியனின் தலைவர் வனுப்பிரதாப் சிங் கூறினார். மேலும், விவசாயி கார்ப்பரேட்டுகளின் தயவில் இருக்க வேண்டும். போதுமான விவாதம் இல்லாமல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் தான் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளளோம் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதிலிருந்து புதிய சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் நேற்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், ரயில் பாதையில் போராட்டம் நடத்தப்படும் என்றும் விரைவில் தேதியை அறிவிக்கப்படும் என்றும் கூறினார். போராட்டங்களை தீவிரப்படுத்துவதோடு, தேசிய தலைநகருக்கு செல்லும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் போராட்டங்களை தொடங்குவதாக விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…