புதிய வரி உயர்வால் பெட்ரோல், டீசல் மற்றும் தங்கம்,வெள்ளி விலை உயரும் நிலை!

Published by
Sulai

இன்று மத்திய அரசின் நிதித்துறை சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். அதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி 2 சதவீதமும் , தங்கம் மற்றும் வெள்ளி மீதான  இறக்குமதி வரி 2.5 சதவீதமும் உயர்த்தப்பட்டு புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பில் , சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயும் , சாலை பாதுகாப்பு வரியாக 1 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் டீசல் விலையானது 2 ரூபாய் வரை உயரும் சூழல் உருவாகியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி, பால், உட்பட மக்களின் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வரி உயர்வால் அதிகம் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் தான்.

அதே போல். தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 10 சதவிகிதலிருந்து 12.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தங்கம் விலை சவரன் 600 ரூபாய் வரை உயரக்கூடும். தற்போது நிலையிலே, தங்கம் விலையானது சவரன் ரூபாய் 26,000 தண்டியது . இந்நிலையில், புதிய வரி விதிப்பால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

Published by
Sulai

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago