தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு போடுங்கள்…! மத்திய அரசு அதிரடி…!

Default Image

பண்டிகை காலங்களில், தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு போடுங்கள். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இதனை அடுத்து பல மாநிலங்களில் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நோய்த்தொற்று குறைந்து வந்த போதிலும் பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும்,  தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ் நியூ இயர் போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து தொடர்ந்து வருவதால் இந்த பண்டிகை காலத்தில் ஊரடங்கை தீவிரப் படுத்துவதற்காக தேவைப்பட்டால் 144 தடை உத்தரவையும் போடலாம் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்