பண்டிகை காலங்களில், தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு போடுங்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியாவில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. இதனை அடுத்து பல மாநிலங்களில் ஊரடங்கிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நோய்த்தொற்று குறைந்து வந்த போதிலும் […]