அதிகரிக்கும் கொரோனா: முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை.. மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா?

Published by
Surya

இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கிய நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி, காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக, தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்துள்ள நிலையில், கொரோனா பரவல் குறித்தும், தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசு விரைவுபடுத்தும் பணிகள் குறித்து பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் பிற மாநிலத்தை விட தமிழகத்தில் குறைந்துள்ளதாகவும், இதனால் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த கூட்டம் முடிவடைந்த பின், மாலை 4:00 மணிக்கு சென்னையில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் உள்துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்து இந்தியளவில் கொரோனா பாதிப்பு குறித்தும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பது குறித்து பேசவுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்கள் கலந்துகொள்ளவில்லை என்றும், இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago