காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும்.. பிரதமர் மோடி பரபரப்பு.!

Published by
மணிகண்டன்

சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேநதிர மோடி பேசுகையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்கு ஆபத்து என்றும் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் விடுவார்கள் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், சமாஜ்வாடியும் காங்கிரஸும் ஆட்சிக்கு வந்தால் பகவான் ராமர் மீண்டும் கூடாரத்தில் அமர்ந்துவிடுவார். ராமர் கோவிலுக்குள் புல்டோசர் ஓட்டுவார்கள். புல்டோசரை எங்கு இயக்க வேண்டும், எங்கு ஓடக்கூடாது என்பதை உ.பி முதல்வர் யோகியிடம் அவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

அயோத்தி ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாற்ற விரும்புவதாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசியுள்ளார். இது சாத்தியமாகுமா என்று சிலர் நினைக்கலாம். ஆனால் இதனை செய்ய அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதுதான் அவர்களின் சாதனை பதிவு. அவர்களுக்கு நாடு ஒரு பொருட்டே இல்லை. குடும்பம், பதவி இதுதான் அவர்களுக்கு முக்கியம்.

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

9 minutes ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

55 minutes ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

3 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

4 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

4 hours ago