வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழக்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குவதில் தான் மிகவும் திருப்தி அடைவதாகவும், ஊரடங்கு காலத்தில் மட்டுமே ரூ.22 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை என்பது தற்போது சாத்தியமாகியுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும், இத்திட்டம் மூலம் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள நேரடியாக விற்பனை செய்ய முடியும் எனவும் பிரதமர் மோடி காணொலியில் தெரிவித்தார்.
இந்த நிதியுதவியானது, பிரதாரின் கிஷான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அறுவடை செய்த பின்னர் சேகரித்த வேளாண் பொருட்களை சேகரித்து வைக்க குளிர்சாதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு ஆகியவை அமைக்க இதன் மூலம் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மத்திய அரசு, 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும், 11 வேளாண் வங்கிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இத்திட்டம் மூலம் விவசாயிகள் 3 சதவீத வட்டி விகிதத்தின் கீழ் அதிகபட்சமாக 2 கோடி வரையில் கடன் பெற்றுக்கொள்ளலாம். நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் கோடி நிதியுதவியும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா 30 ஆயிரம் கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் மட்டுமே இந்த கடன் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…