வேளாண் உற்பத்தியாளர்களுக்காக 1,00,000 கோடி நிதியுதவி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!

Published by
மணிகண்டன்

வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி வழக்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது பிரதமர் மோடி பேசுகையில்,  ‘8.5 கோடி விவசாயிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்குவதில் தான் மிகவும் திருப்தி அடைவதாகவும், ஊரடங்கு காலத்தில் மட்டுமே ரூ.22 ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது. ஒரே தேசம், ஒரே சந்தை என்பது தற்போது சாத்தியமாகியுள்ளது.  இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும், இத்திட்டம் மூலம் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள நேரடியாக விற்பனை செய்ய முடியும் எனவும் பிரதமர் மோடி காணொலியில் தெரிவித்தார்.

இந்த நிதியுதவியானது, பிரதாரின் கிஷான் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அறுவடை செய்த பின்னர் சேகரித்த வேளாண் பொருட்களை சேகரித்து வைக்க குளிர்சாதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு ஆகியவை அமைக்க இதன் மூலம் விவசாயிகள் கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக மத்திய அரசு, 12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுடனும், 11 வேளாண் வங்கிகளுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இத்திட்டம் மூலம் விவசாயிகள் 3 சதவீத வட்டி விகிதத்தின் கீழ் அதிகபட்சமாக 2 கோடி வரையில் கடன் பெற்றுக்கொள்ளலாம். நடப்பு ஆண்டில் 10 ஆயிரம் கோடி நிதியுதவியும், அடுத்த 3 ஆண்டுகளில் தலா 30 ஆயிரம் கோடி நிதியுதவியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் மட்டுமே இந்த கடன் தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்
Tags: PM Modi

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

38 minutes ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

2 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

2 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

3 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

3 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

4 hours ago