"வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மனவேதனை அடைந்துள்ளேன்!" – பிரதமர் மோடி

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் உயிரிழந்த நிலையில், அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்க்கு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மருத்துவமனனயில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு மனவேதனை அடைந்துள்ளேன். ராம் விலாஸ் பஸ்வானின் மறைவு இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடைய மறைவு, எனக்கு தனிப்பட்ட இழப்பும் கூட ஒவ்வொரு ஏழையும் கண்ணியமாக வாழ வேண்டும் என எண்ணியவரை இழந்துவிட்டோம்” என தனது இரங்கல் செய்தியை பிரதமர் தெரிவித்துள்ளார்.

unknown node