இன்றிரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை.?

அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த உரையாடலில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி ஊரடங்கை நீடிப்பதாக ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளார் என்றும் இந்தியா ஊரடங்கை முன்னதாகவே அமல்படுத்தியதால் தான், பல வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவிற்கு ஏற்படவில்லை என கூறியுள்ளார். இந்த நேரத்தில் ஊரடங்கை தளர்த்திக்கொண்டால், இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் வீணாக போய்விடும் என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025