அசாம் மாநில முதல்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு…!

Default Image

அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா மற்றும் 6 உயரதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 

அசாம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கிடையே சமீப நாட்களாக எல்லைப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இந்த பிரச்சினை கடந்த 26-ஆம் தேதி மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதில் இரு மாநிலத்தை சேர்ந்த மக்களும், காவல்துறையினரும் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் அசாம் காவல்துறையினர் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து உள்துறை அமைச்சர் அவர்கள் இரு மாநில முதல்வர்களிடமும்  தொலைபேசியில் பேசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். நிலைமை சீராகி உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஹிமந்தா பிஸ்வாவும் மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தாங்காவும் வெளிப்படையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிய நிலையில்  அசாம் முதலமைச்சர், அசாம் ஐஜி அனுராக் அகர்வால், கச்சார் டிஐஜி தேவ்ஜோதி முகர்தி, கச்சார் எஸ்பி சந்திரகாந்த் நிம்பல்கர், டோலை காவல் நிலையப் பொறுப்பாளர் சனாப் உதின் ஆகியோர் மீது மிசோரம் போலீசார் கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies