மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!
உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர், சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர், மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர் ஆகியோரை நியமித்தார்.

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80(1)(a) மற்றும் பிரிவு 80(3) இன் கீழ், கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளன.
- உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர்
- ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர்
- சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர்
- மீனாக்ஷி ஜெயின், வரலாற்று ஆய்வாளர்
இந்த நியமனங்கள் ஜூலை 12, 2025 அன்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன. இவர்கள் முன்பு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் ஓய்வு காரணமாக ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
It’s a matter of immense joy that Dr. Meenakshi Jain Ji has been nominated to the Rajya Sabha by Rashtrapati Ji. She has distinguished herself as a scholar, researcher and historian. Her work in the fields of education, literature, history and political science have enriched…
— Narendra Modi (@narendramodi) July 13, 2025
பிரதமர் நரேந்திர மோடி இந்த நியமனங்களை வரவேற்று, ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பையும் பாராட்டி, அவர்களின் நாடாளுமன்ற பயணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நியமனங்கள் மாநிலங்களவையில் பலதரப்பட்ட நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் கொண்டு வருவதற்காகவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலும் செய்யப்பட்டுள்ளன.
Shri Harsh Vardhan Shringla Ji has excelled as a diplomat, intellectual and strategic thinker. Over the years, he’s made key contributions to India’s foreign policy and also contributed to our G20 Presidency. Glad that he’s been nominated to the Rajya Sabha by President of India.…
— Narendra Modi (@narendramodi) July 13, 2025
உஜ்ஜ்வல் நிகாம் : மூத்த வழக்கறிஞரும், பொது வழக்கு தொடுப்பவருமான இவர், 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் அஜ்மல் கசாப் உள்ளிட்ட பல முக்கிய குற்ற வழக்குகளை கையாண்டவர்.
ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்கிளா : முன்னாள் வெளியுறவு செயலாளரான இவர், அமெரிக்கா, வங்கதேசம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்திய தூதராக பணியாற்றியவர். மேலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் G20 தலைமைக்கு முதன்மை ஒருங்கிணைப்பாளராக பங்களித்தவர்.
சி. சதானந்தன் மாஸ்டர்: கேரளாவைச் சேர்ந்த ஆசிரியரும், சமூக சேவகருமான இவர், 1994 இல் CPI(M) கட்சியினரால் தாக்கப்பட்டு கடுமையான அடிப்பட்ட போதும், தேசிய வளர்ச்சி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு தொடர்ந்து பங்களித்தவர்.
மீனாக்ஷி ஜெயின் : புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளரும், பேராசிரியருமான இவர், இந்திய நாகரிகம், மதம் மற்றும் அரசியல் தொடர்பான ஆய்வுகளுக்கு பங்களித்தவர். 2020 இல் பத்மஶ்ரீ விருது பெற்றவர்.