இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு இங்கிலாந்தில் ஜூன் 11 முதல் 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று இங்கிலாந்தில் நடைபெறக்கூடிய ஜி-7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில், கொரோனா பரவல் குறையாததால் ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த மாநாட்டில் 12 மற்றும் 13 ஆகிய இரு அமர்வில் பிரதமர் மோடி பங்கேற்பார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஜி-7 மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். இதில் உடல்நிலை மற்றும் காலநிலை மாற்றத்தை மையமாகக்கொண்டு கொரோனா தொற்றுக்கு மத்தியில் எப்படி உலகை முன் நோக்கி நகர்த்துவது என்பது குறித்த கருத்துகளை தலைவர்கள் பரிமாறிக் கொள்வார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,…
ரஷ்யாவும் உக்ரைனும் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று, ஜூன் 2, 2025 அன்று இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த…
நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை…