ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி. அங்கு ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு இன்று பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.
விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார். இதையடுத்து லக்னோ விமான நிலையம் சென்றடைந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.
அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர்.
இதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.மேலும் 40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டுகிறார்.
இந்நிலையில் அயோத்தியில் உள்ள ஹனுமன் கர்கி கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி வழிபாடு செய்தார் அதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலிளும் தரிசனம் செய்தார்.
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…